நைஜரில் பயணிகள் பஸ் மீது துப்பாக்கிச் சூடு : 19 பேர் உயிரிழப்பு

18 Mar, 2022 | 02:02 PM
image

நைஜரில் பயணிகள் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவின் தலைநகரான ஓவாகடூகோவில் இருந்து, நைஜர் நாட்டின் தலைநகர் நியாமி நோக்கி பஸ் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.

ஃபோனோ கிராமம் அருகே இரு சக்கர வாகனங்களில் சென்ற 12 இனந்தெரியாத நபர்கள், அந்த பஸ்ஸை வழி மறித்து நிறுத்தினர்.

பின்னர் அதில் இருந்து பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர் இதில், 19 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

இதை தொடர்ந்து அந்த பஸ்ஸை குறித்த நபர்கள் தீ வைத்து எரித்ததாக போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய  குழுவினர், புர்கினா பாசோ நாட்டில் இது போன்ற தாக்குதல்களை நடத்தி உள்ளனர் ஆனால், இந்த தாக்குதலுக்கு எவ்வித அமைப்புக்களும் பொறுப்பேற்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52