நைஜரில் பயணிகள் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவின் தலைநகரான ஓவாகடூகோவில் இருந்து, நைஜர் நாட்டின் தலைநகர் நியாமி நோக்கி பஸ் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
ஃபோனோ கிராமம் அருகே இரு சக்கர வாகனங்களில் சென்ற 12 இனந்தெரியாத நபர்கள், அந்த பஸ்ஸை வழி மறித்து நிறுத்தினர்.
பின்னர் அதில் இருந்து பயணிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர் இதில், 19 பயணிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதை தொடர்ந்து அந்த பஸ்ஸை குறித்த நபர்கள் தீ வைத்து எரித்ததாக போக்குவரத்து நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குழுவினர், புர்கினா பாசோ நாட்டில் இது போன்ற தாக்குதல்களை நடத்தி உள்ளனர் ஆனால், இந்த தாக்குதலுக்கு எவ்வித அமைப்புக்களும் பொறுப்பேற்கவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM