ஜப்பானின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில் சுனாதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சக்திவாய்ந்த நில அதிர்வு 7.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
ஜப்பானின் வடக்கு பகுதியான புகுஷிமாவின் கரையோரப் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
கடலுக்கடியில் 60 கிலோ மீற்றர் ஆழத்தில் நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதேவேளை, புகுஷிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு 9.0 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து அங்கு ஏற்பட்ட சுனாமியால் அணு உலை கடுமையாக சேதமடைந்தது.
நில அதிர்வு காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதுடன் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நில அதிர்வை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம் நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM