அரச எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கிறது மக்கள் விடுதலை முன்னணி

16 Mar, 2022 | 07:20 PM
image

(எம்.மனோசித்ரா)

மக்கள் எதிர்கொண்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்குமாறும் , தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தை பதவி விலகுமாறும் வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

அதற்கமைய ஜே.வி.பி.யின் முதலாவது ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை (17) மாலை 3 மணிக்கு களுத்துறை நகரத்தில் இடம்பெறவுள்ளது. 

இதே வேளை வெள்ளிக்கிழமை (18) மாலை 3 மணிக்கு கொழும்பு - புறக்கோட்டையில் ஜே.வி.பி. இளைஞர் அணியினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை நுகேகொடையிலும் , 29 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. 

பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியதாகக் காணப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

டொலர் நெருக்கடியினால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 

சமையல் எரிவாயு, எரிபொருள், பால்மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்கிறது. 

இதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினரால் நேற்று செவ்வாய்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். 

இந்நிலையிலேயே ஜே.வி.பி.யும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59