நடிகர் பரத் நடிப்பில் தயாராக இருக்கும் ஐம்பதாவது திரைப்படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
'பொய்ஸ்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பரத்.
கடந்த 19 ஆண்டுகளில் 'காதல்', 'எம் மகன்', 'வெயில்', 'நேபாளி', 'சேவல்', 'கடுகு' உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இவரது நடிப்பில் தற்போது 50 ஆவது படம் தயாராகிறது.
ஆர். பி பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பாலா இயக்கத்தில் தயாராகும் இந்தப் பெயரிடப்படாத படத்தை பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் பரத்துடன் நடிகை வாணி போஜன், நடிகர்கள் விவேக் பிரசன்னா, டேனியல் போப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அதிதியாக பங்குபற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் பரத்தின் 50வது படம் என்பதால் இப்படத்திற்கு தொடக்க நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM