பதுளையை அண்மித்த அட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இரு பெருந்தோட்ட ஆலயங்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்ட சம்பவங்கள் நேற்று இரவு (15-03-2022) இடம்பெற்றுள்ளன.
இத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து 17, 19, 20 ஆகிய வயதுகளைக் கொண்ட மூன்று பேரை 16-03-2022 இன்று
அட்டாம்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹின்நாராங்கலை பெருந்தோட்டப் பிரிவின் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியலை உடைத்து, பத்தாயிரம் ரூபா பணம் திருடப்பட்டது.
அடுத்து, எல்லேவலை பெருந்தோட்டப் பிரிவின் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து ஆறாயிரம் ரூபா பணமும் திருடப்பட்டது.
இத் திருட்டுக்கள் குறித்து, ஆலய நிருவாகத்தினர், அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளையடுத்து, அட்டாம்பிட்டிய 50 ஏக்கர் பிரிவு பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 17, 19, 20 வயதுகளைக் கொண்ட மூன்று பேரை பொலிசார் கைது செய்தனர்.
குறித்த மூவரும் திருட்டுக்களை ஒப்புக் கொண்ட போதிலும், திருடப்பட்ட பணத்தில் ஒரு தொகைப் பணமே மீட்கப்பட்டது. ஏனைய பணத்தை தாம் செலவு செய்துவிட்டதாகவும், வறுமையின் காரணமாகவே, இந்த திருட்டுக்களை மேற்கொண்டதாகவும், கைது செய்யப்பட்ட மூவரும், பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தனர்.
இம் மூவரும் விசாரணையின் பின்னர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM