பதுளை பெருந்தோட்ட ஆலயங்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருடிய மூவர் கைது

Published By: Digital Desk 4

16 Mar, 2022 | 03:04 PM
image

பதுளையை அண்மித்த அட்டாம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இரு பெருந்தோட்ட ஆலயங்களின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்ட சம்பவங்கள் நேற்று இரவு (15-03-2022) இடம்பெற்றுள்ளன. 

இத் திருட்டுச் சம்பவங்கள் குறித்து 17, 19, 20 ஆகிய வயதுகளைக் கொண்ட மூன்று பேரை 16-03-2022 இன்று

அட்டாம்பிட்டிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹின்நாராங்கலை பெருந்தோட்டப் பிரிவின் ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியலை உடைத்து, பத்தாயிரம் ரூபா பணம் திருடப்பட்டது.

அடுத்து, எல்லேவலை பெருந்தோட்டப் பிரிவின் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலிருந்து ஆறாயிரம் ரூபா பணமும் திருடப்பட்டது.

இத் திருட்டுக்கள் குறித்து, ஆலய நிருவாகத்தினர், அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாடுகளையடுத்து, அட்டாம்பிட்டிய 50 ஏக்கர் பிரிவு பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 17, 19, 20 வயதுகளைக் கொண்ட மூன்று பேரை பொலிசார் கைது செய்தனர்.

குறித்த மூவரும் திருட்டுக்களை ஒப்புக் கொண்ட போதிலும், திருடப்பட்ட பணத்தில் ஒரு தொகைப் பணமே மீட்கப்பட்டது. ஏனைய பணத்தை தாம் செலவு செய்துவிட்டதாகவும், வறுமையின் காரணமாகவே, இந்த திருட்டுக்களை மேற்கொண்டதாகவும், கைது செய்யப்பட்ட மூவரும், பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தனர்.

இம் மூவரும் விசாரணையின் பின்னர், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென அட்டாம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08