சொகுசு காரில் பயணித்த மூவர் கேரள கஞ்சாவுடன் கைது

16 Mar, 2022 | 02:17 PM
image

வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.   

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த சொகுசு வாகனத்தை (காரினை) இன்று காலை வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வழிமறித்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கேரள கஞ்சாவினை மீட்டதுடன், வாகனத்தையும், அதில் பயணித்த குருணாகல் மற்றும்  கண்டி பகுதியை சேர்ந்த 44 ,41, 39 வயதுடைய  பெண் ஒருவர் உட்பட மூவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01