வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த சொகுசு வாகனத்தை (காரினை) இன்று காலை வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வழிமறித்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கேரள கஞ்சாவினை மீட்டதுடன், வாகனத்தையும், அதில் பயணித்த குருணாகல் மற்றும் கண்டி பகுதியை சேர்ந்த 44 ,41, 39 வயதுடைய பெண் ஒருவர் உட்பட மூவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் பன்னிரெண்டு இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததுடன் கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM