உக்ரேனில் பெண் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு : செய்தியாளர் காயம்

16 Mar, 2022 | 11:26 AM
image

உக்ரேனில் தனியார் செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா  குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகியோர் உக்ரேன் தலைநகர் கீவ் நகருக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

Oleksandra 'Sasha' Kuvshynova is pictured working in Ukraine with Fox News Journalist Trey Yingst and cameraman Pierre Zakrzewski. She was killed Monday when the car she was traveling in, along with Zakrzewski, came under fire

இதேவேளை, குறித்த சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற செய்தியாளர் காயமடைந்த நிலையில் உக்ரேன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மூவரும் போர் செய்தி சேகரிப்புக்காக பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்களது வாகனம்  போரின் போது இடம்பெற்ற தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

இதில் சாஷா என்று அழைக்கப்படும் அலெக்ஸாண்ட்ரா  குவ்ஷினோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அவர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்த  இங்கிலாந்தை சேர்ந்த பெஞ்சமின் ஹால் என்ற செய்தியாளர் காயமடைந்த நிலையில், உக்ரேன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Zakrzewski (pictured here with Steve Harrington and two senior field producers) was a war zone photographer who covered nearly every international story for Fox News from Iraq to Afghanistan to Syria during his long tenure

லண்டனைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளரான பியர் ஜொக்ர்ஸெவஸ்கி கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரேனில் பணிபுரிந்து வந்துள்ளார்.

Zakrzewski was a war zone photographer who covered nearly every international story for Fox News from Iraq to Afghanistan to Syria

உக்ரேன் மீது ரஷ்ய படையினர் கடந்த 20 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இருந்த போதும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதேவேளை, ஏற்கனவே ஆவணப்படத் தயாரிப்பாளரான ப்ரென்ட் ரெனாட், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

Rescuers work next to a residential building damaged by shelling in Kyiv, Ukraine, this week

இதனிடையே, உக்ரைன் போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை 97 குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரேனின் மரியுபோல் நகரில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59