உக்ரேன் மீதான போர் 18 ஆவது நாளாக நீடித்த நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல்களில் உக்ரேன் நகரங்கள் தீப்பற்றி எரிந்து வருகின்றன.
உக்ரேன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதேவேளையில் ரஷ்யா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால் உக்ரேன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.
உக்ரேனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன.
வான்வழியாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் அதே வேளையில், தரை வழியாகவும் ரஷ்ய படைகள் உக்ரேன் நகரங்களுக்குள் முன்னேறி வருகின்றன.
இதனிடையே உக்ரேன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது,
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ஏற்கனவே இதேபோன்று நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை புடின் நிராகரித்துவிட்ட நிலையில் ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பை அவர் ஏற்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்த நிலையில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புடின் தெரிவித்தார்.
துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் உக்ரேன்-ரஷ்யா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உக்ரேன் - ரஷ்யா இடையே இன்று காணொளி காட்சியின் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ரஷ்யா-உக்ரேன் பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை இடம்பெறும் என்று உக்ரேனிய தூதுக்குழுவை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே நடந்த நேரடிச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தையில் முன்னேறி வருவதாக இரு தரப்பும் கூறியதை அடுத்து அடுத்த சுற்று பேச்சு வார்த்தை உறுதியாகி உள்ளது.
முன்னதாக ரஷ்யாவின் பேச்சுவார்த்தைக் குழுவின் மூத்த உறுப்பினரான லியோனிட் ஸ்லட்ஸ்கி, அண்டை நாடான பெலாரசின் எல்லையில் நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM