(நெவில் அன்தனி)
சிட்டி புட்போல் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் 19 வயதுக்குட்பட்ட எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கலம்போ எவ் சி இளையோர் அணி அதிர்ஷ்டவசமாக தகுதிபெற்றது.
சிட்டி லீக் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (12) நடைபெற்ற மொரகஸ்முல்லை இளையோர் அணிக்கு எதிரான மீள் அரை இறுதிப் போட்டியில் 5 - 3 என்ற பெனல்டி முறையில் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கலம்போ எவ் சி இளையோர் அணி தகுதி பெற்றது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் ஒரு வாரத்துக்கு முன்னர் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கலம்போ எவ் சி 3 - 1 என வெற்றிபெற்றிருந்தது. எனினும் தகுதியற்ற வீரர்கள் விளையாடியதாக இரண்டு அணிகளும் ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்ததால் போட்டி ஏற்பாட்டாளர்களினால் அப் போட்டி முடிவு செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தகுதியற்ற வீரர்களை தகுதி நீக்கிவிட்டு மீள் அரை இறுதிப் போட்டியை நடத்த ஏற்பாட்டுக் குழுவினர் தீர்மானித்தனர்.
இதற்கு அமைய சனிக்கிழமை நடத்தப்பட்ட மீள் அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. அப் போட்டியில் கலம்போ எவ் சி இளையோர் அணி ஆதிக்கம் செலுத்தியபோதிலும் அவ்வணியினால் கோல் போட முடியாமல் போனது.
கலம்போ எவ் சி இளையோர் அணி கோல் போடுவதற்கு எடுத்துக்கொண்ட குறைந்தது 7 முயற்சிகளை மொரகஸ்முல்லை இளையோர் அணி கோல்காப்பாளர் ஷமல் ஷமோத் தடுத்து நிறுத்தயதால் அவ்வணியினால் வெற்றிபெற முடியாமல் போனது.
மறு புறத்தில் மொரகஸ்முல்லை இiளாயோர் அணியின் இரண்டு கோல் போடும் முயற்சிகளை கலம்போ எவ் சி இளையோர் அணி கோல்காப்பாளர் சம்பத் விதுரங்க தடுத்து நிறுத்தினார்.
போட்டியின் கடைசி 15 நிமிடங்களில் கடும் மழை பெய்து மைதானத்தில் ஆங்காங்கே நீர் நிறைந்ததால் வீரர்கள் பந்தை நகர்த்திச் செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
போட்டி முடிவடைய ஒரு சில நிமிடங்கள் இருந்தபோது மழை ஒய்ந்தது. தொடர்ந்து போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் மத்தியஸ்தர் தரங்க புஷ்பகுமார பெனல்டி முறையை அமுல்படுத்தினார்.
கலம்போ எவ் சி சார்பாக அணித் தலைவர் நிக்சன் அன்தனி, எம். இல்ஹாஸ், எம். லபார், எம். காலிக், சச்சின் விமுக்தி ஆகியோர் 5 பெனல்டிகளையும் கோலினுள் புகுத்தினர்.
மொரகஸ்முல்லை சார்பாக பன்சிலு நெமிதர, ரி. அஷன்த, எஸ். பெரேரா ஆகியோர் பெனல்டிகளை கோலினுள் புகுத்தினர். அணித் தலைவர் நவோத் லக்ஷித்தவின் பெனல்டியை கலம்போ எவ் சி கோல்காப்பாளர் தடுத்து நிறுத்தினார்.
ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற ஜாவா லேன் இளையோர் அணியை கலம்போ எவ் சி இளையோர் அணி எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM