(இராஜதுரை ஹஷான்)
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை நிறைவு செய்வதற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தை தொடர்ந்து இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிற்கும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைப்பேசி ஊடாக உரையாடலின் போது நிதியமைச்சரின் இந்திய விஜயம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது,
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல ஆகியோர் இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை நிறைவு செய்வதற்கு கடந்த மாதம் 25ஆம் திகதி இந்தியா செல்ல தீர்மானித்திருந்த நிலைமையில் தனிப்பட்ட காரணிகளினால் அவ்விஜயம் பிற்போடப்பட்டது.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். எரிபொருள், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியா இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான குறுகிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்தும் முறைமையை இலகுப்படுத்தல் வழிமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டன.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் வகையில் கடன்வரி நீடிப்பை கருத்திற்கொண்டு அவசர உணவு மற்றும் சுகாதார சேவைத்திட்டம், எரிபொருள் இறக்குமதி செய்யும் எரிசக்தி பாதுகாப்பு திட்டம்இதிருகோணமலை எண்ணெய் தாங்கிகளை நவீனமயப்படுத்தல், நடைமுறையில் உள்ள நிலுவை தொகை சிக்கல்களை தீர்ப்பதற்காக இலங்கைக்கு உதவுவதற்கு நாணய பரிமாற்றத்தின் ஊடாக சலுகை வழங்கல் மற்றும் பொருளாதார முன்னேற்றம், தொழில்வாய்ப்பை விரிவுப்படுத்தும் வகையில் இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீடுகளை இலகுப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. அவை குறுகிய மற்றும் நடுத்தர கால ஒத்துழைப்பிற்கான தூண்கள் என கருதப்படுகிறது.
எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது. இலங்கை இந்தியாவிடமிருந்து மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM