(எம்.எப்.எம்.பஸீர்)
போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, இலங்கை போக்குவரத்து சபைக்கு பிரதி தலைவர் பதவி ஒன்றினை புதிதாக உருவாக்கி, அப்பதவியில் தனக்கு நெருக்கமான ஒருவரை அமர்த்தியதன் ஊடாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக கூறி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை மீளப் பெறுவதா இல்லை தொடர்வதா என தமது நிலைப்பாட்டை எதிர்வரும் மே 6 ஆம் திகதி அறிவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டது.
இந்த வழக்கை தொடர்ந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவுக்கு, பதில் பிரதான நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
அரசுக்கு 33 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு, தாக்கல் செய்யப்பட்ட முறைமையானது சட்டத்துக்கு முரண் என குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார வெல்கம சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி மன்றில் முன் வைத்த தர்க்கத்தை அடுத்தே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM