(எம்.மனோசித்ரா)
அனுராதபுரம் - வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதன் போது தாய் காப்பற்றப்பட்டுள்ள போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் அவரது குழந்தையுடன் கிணற்றில் குதித்ததை அவதானித்த பிரதேச மக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் ஒருவயதும் 3 மாதங்களுமுடைய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM