தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு சிவில் பயணச்சேவை, வர்த்தக போக்குவரத்து சேவை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசேட போக்குவரத்து வசதிகளை வழங்கும் இலங்கை விமானப்படையின் 'ஹெலிடுவர்' விமான சேவை நிறுவனம் இன்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி மீண்டும் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த 'ஹெலிடுவர்' விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறித்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன கருத்து தெரிவிக்கையில்,
உள்நாட்டு சிவில் பயணச்சேவை, வர்த்தக போக்குவரத்து சேவை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசேட போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு 1972 ஆண்டு காலப்பகுதியில் இலங்கை விமானபடை மூலம் ஆரம்பிக்கப்பட்ட விமான நிறுவனமாகும்.
எதிர்காலத்தில் குறித்த விமான நிறுவனத்தின் செயற்பாடுகளை வினைத்திறனான முறையில் முன்னெடுத்து செல்ல கடந்த காலங்களில் விமான சேவை நிறுவனத்தின் விமான சேவைகள் செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது நிறுவனத்தின் விமான செயற்பாடுகளை மீண்டும் புதுபொழிவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.
மேலும் 'ஹெலிடுவர்' விமான சேவை மீண்டும் அநுராதபுரம், பலாளி, சீனன்குடா மற்றும் மட்டகளப்பு விமான நிலையங்களில் தனது சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக தளபதி இதன் போது தெரிவித்தார்.
'ஹெலிடுவர்' விமான சேவை மீண்டும் தமது விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பாரியளவில் பங்களிப்பு வழங்கும் முதன்மை நிறுவனமாக திகழும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையினால் ஆரம்பிக்கப்பட்ட 'ஹெலிடுவர்' இலங்கையின் முன்னனி உள்நாட்டு சிவில் பயணச்சேவை, வர்த்தக போக்குவரத்து சேவை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசேட போக்குவரத்து சேவை வசதிகளை வழங்கும் பாதுகாப்பானதொரு முன்னணி விமான நிறுவனமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM