நாட்டின் நேற்று மேற்கொள்ளப்பட்ட இருவேறு சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் கொன்ஸ்தபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொரளை
பொரளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாதா பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது குறித்த சந்தேகநபரை கைதுசெய்ய முற்படும் போது பொலிஸ் கொன்ஸ்தபிள் ஒருவரை ஆயுதத்தால் தாக்கியதாகவும் காயமடைந்த கொன்ஸ்தபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பெறுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
பொரளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை
அம்பாறை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக அம்பாறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 790 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM