பதுளை உடுவரை பெருந்தோட்ட (நேப்பியர்) கீழ்ப்பிரிவைச் சேர்ந்த 18 வயது தர்மராஜா நித்தியா என்ற மாணவியின் கொமூடூரக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில் 09-03-2022நேற்று மாலை ஆஜர் செய்யப்பட்டார்.
இதையடுத்து நீதிபதி சமிந்த கருணாதாச, சந்தேக நபரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், தொடர்ந்து புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஹாலி-எலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.
கடந்த 08-03-2022 ஆம் திகதி பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த தர்மராஜா நித்தியா, கோடரியினால் தாக்கப்பட்டு, கோரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து சந்தேக நபராக இனம் காணப்பட்ட இராமையா திபாகரன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இதையடுத்து குறித்த நபரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து நேற்று 09-03-2022 அதிகாலை உடுவரை ரயில் நிலையத்திற்கு பின்புறமாக பதுங்கியிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அந்த நபர் பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தனது காதலுக்கு சாதகமான பதில் வழங்காமல், தன்னை நித்தியா ஏமாற்றியதால், ஆத்திரம் கொண்ட நான் கோடரியினால் தாக்கி கொலை செய்தேன் என்று உறுதியாகக் கூறினார்.
மேலும் குறித்த நபரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டப் பின்னர், ஹா-லிஎலைப் பொலிசார் அவரை நேற்று மாலை பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்திருந்த நிலையில், குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை, விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM