மேல் மாகாணத்தில் பொலிஸார் நேற்றிரவு (13) மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பின்போது பல்வேறு குற்றங்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் 1262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 11 மணிமுதல் அதிகாலை 1 மணிவரை குறித்த சுற்றிவளைப்பினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.
இவர்களில், பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் 46 பேர் அடங்குவதாக சிரேஸ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் 540 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 177 பேர், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 17 பேர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 23 பேர் இந்த சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய 103 பேர், விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தியவர்கள் 323 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் மற்றும் முப்படையிலிருந்து தப்பிச்சென்ற நால்வரும் இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்புகளில் மேல் மாகாணத்தச் சேர்ந்த 3072 பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM