(எம்.எப்.எம்.பஸீர்)
போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 109 பேர் 900 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அந்த நீதிமன்றம் புதன்கிழமை (9) தீர்மானித்தது.
இது குறித்த மேன்முறையீட்டு மனு புதன்கிழமை (9) மேல் மாகாண சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றின் நீதிபதிகளான பிரான்க் குணவர்தன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்றதுடன், இந்த மேன் முறையீட்டு மனு மீதான விசாரணைகள் குறித்த வாதங்களை எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.
போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் 109 பேர், 900 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாது எனவும் அவற்றை தள்ளுபடி செய்து தம்மை குற்றச் சாட்டுக்கலிலிருந்து விடுவிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் இந்த சிவில் மேன் முறையீட்டு மனுவூடாக கோரப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சத்துரிகா டி அல்விஸ், குறித்த வாதத்தின் அடிப்படையிலான கோரிக்கையை ஏற்கனவே நிரகாரித்த நிலையில், அந்த தீர்மானத்தை திருத்தி உத்தரவு பிறப்பிக்குமாறே இந்த மேன் முறையீட்டு மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2021 நவம்பர் 29 ஆம் திகதி, மாவட்ட நீதிமன்றில் உள்ள குறித்த வழக்குகளை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வாதங்களை முன் வைத்திருந்தார். இதன்போது முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கடந்த 2022 ஜனவரி 7 ஆம் திகதி நீதிமன்றம் தனது உத்தரவை அறிவித்து பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைகளை நிராகரிப்பதாக அறிவித்தது.
இந் நிலையிலேயே அதற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றில் மேன் முறையீடு செய்துள்ளார்.
போதுமான உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையை மையப்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட 289 பேர் இரு மாவட்ட நீதிமன்றங்களில் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.
கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அவை ஊடாக பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ள நட்ட ஈட்டின் மொத்த பெறுமதி 1250 மில்லியன் ரூபாவாகும்.
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கட்டுவபிட்டிய தேவாலயம் மீது நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 180 பேர் நீர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நட்ட ஈடு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 109 பேர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த அனைத்து நட்ட ஈடு கோரும் வழக்குகளிலும் பிரதிவாதிகளாக,
முன்னள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தேசிய உளவுச் சேவையும் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகள்க பெயரிடப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, சட்டத்தரணி சந்துன் நாகஹவத்த உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM