மலையக மக்களை  இரண்டாந்தர மக்களாக பார்க்க வேண்டாம் - எதிர்க்கட்சி உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன்

Published By: Digital Desk 4

09 Mar, 2022 | 05:21 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்கு அதிகளவான பிரதேச செயலகங்கள் காணப்படுகின்ற நிலையில், 7 இலட்சம் மக்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்துக்கு வெறுமனே  5 பிரதேச செயலகங்களே காணப்படுகிறன. மலையக மக்களை இந்த அரசாங்கம் இரண்டாந்தர மக்களாக பார்ப்பதே இதற்குக் காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் சபையில் தெரிவித்தார்.

கைவிடப்பட்ட பாடசாலை அபிவிருத்திகளை அரசாங்கம் பூர்த்தியாக்க வேண்டும் : வே.  இராதாகிருஷ்ணன் | Virakesari.lk

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்து அதற்கான விசேட நிறுவனம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது நல்லதொரு விடயமென்றே கருதுகின்றோம். ஒரு நபரது தனிப்பட்ட தரவுகள் ஒரே அடையாள அட்டையில் உள்ளடக்கப்படும் என்றால் வெவ்வேறு ஆதாரங்களை தூக்கிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே தனித்துவ அடையாள அட்டையை வழங்குவதை நாமும் ஆதரிப்போம். ஆனால் மலையகத்தை பொறுத்தவரை இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மலையகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு இன்னமும் அவர்களுக்கான பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அதேபோல் அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க பல நடமாடும் சேவைகளை முன்னெடுதத்தாலும் கூட அதுவும் முழுமையடையவில்லை. ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்றவற்றின் மூலமாக பணத்தை பெற்றுக்கொள்ளவும் குறைவான வாய்ப்புகளே உள்ளது. எனவே முதலில் மலையக மக்களுக்கு இவற்றை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துவிட்டு அதன் பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் இவற்றை எல்லாம் செய்து செய்து முடிக்க உப அரசாங்க அதிபர் அலுவலகம் இயங்க வேண்டும். நுவரெலியா மாவட்டத்தை ஐந்து பிரதேச செயலகங்களாக பிரித்திருக்க வேண்டும். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கூட விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவற்றை செயற்படுத்தவில்லை. அங்குள்ள பிரதேச செயலகங்கள் உப காரியாலயங்களாக மாற்றப்பட்டுள்ளன. 

இதனை நாம் கேட்கவில்லை. எனவே பிரதேச செயலகங்களாக இவை மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் கொண்டுவரும் இந்த முயற்சிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். இதனை கருத்தில் கொள்ள வேண்டும். எமது மக்களை இரண்டாம் தரப்பு பிரஜைகளாக பார்க்க வேண்டாம். எமது அடிப்படை உரிமைகளை பறிக்க வேண்டாம். எமது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும் தலவாக்கலை நுவரெலியா பாதையிலே ஒரு பெரிய மரம் அறுக்கப்பட்டதால் அது சரிந்து விழுந்து மகேஸ்வரன் என்ற ஒரு கணித ஆசிரியர் உயிரிழந்துள்ளார். முன் நிதானம் இல்லாது முன்னெடுக்கப்பட்ட இந்த செயலினால் ஒரு ஆசிரியரை இழந்துள்ளோம். அதுமட்டுமல்ல அந்த மரத்தின் கீழ் இருந்த இந்து ஆலயத்தை மாற்று இனத்தவர்கள் பரிபாலனம் செய்யும் நிலையொன்றும் உருவாகியுள்ளது. 

இது அப்பகுதியில் இன துவேசத்தை உருவாக்கும் செயலாக மாறும். ஏற்கனவே 1990 களில் தலவாக்கலையில் ஏற்பட்ட இன பிரச்சினை பின்னர் பாரிய குழப்பங்களை ஏற்படுத்தியது. மீண்டும் அவ்வாறான நடவடிக்கை எடுக்கக்கூடாது. இப்போது இருக்கும் ஆலயத்தையும் இடத்தையும் அபகரிக்க முயற்சிக கூடாது. அரசாங்கம் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32