ரஷ்யாவில் இருந்து அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகளையும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தடைசெய்துள்ளன.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய எரிவாயு மீதான அதன் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
இது குறித்து செவ்வாயன்று காலை வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த நடவடிக்கை "ரஷ்யாவின் பொருளாதாரத்தின் முக்கிய உயிர் நாடியை" குறிவைக்கிறது என்றார்.
இதனிடையே 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்களின் இறக்குமதியை இங்கிலாந்து படிப்படியாக நிறுத்தும் என்று பிரிட்டிஷ் வர்த்தக செயலாளர் குவாசி குவார்டெங் செவ்வாயன்று அறிவித்தார்.
மறுபக்கம் ஐரோப்பிய ஆணையம் ரஷ்ய எரிவாயுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவையை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கும் என்று கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் எரிவாயுவில் 40 சதவீதத்தை ரஷ்யாவிலிருந்து பெறுகிறது.
எரிசக்தி ஏற்றுமதி ரஷ்யாவிற்கு வருவாயின் முக்கிய ஆதாரமாக உள்ளது, ஆனால் இந்த நடவடிக்கை ரஷ்யாவை மாத்திரம் அல்ல மேற்கத்திய நுகர்வோரை பாதிக்கும்.
சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக ரஷ்யா உள்ளது.
இதேவேளை ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றீடாக வெனிசுலா அதன் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கூறியுள்ளது.
எவ்வாறெனினும் உக்ரேன் - ரஷ்ய மோதல்கள் காரணமாக திங்களன்று ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 139 அமெரிக்க டொலர்களாக (£106) உயர்வடைந்தது. இது சுமார் 14 ஆண்டுகளில் ஏற்பட்ட எரிபொருளின் அதிகபடியான விலை உயர்வு ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM