(எம்.எம்.எஸ்)
மெக்ஸிக்கோவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது இரண்டு தரப்புக்களால் ஏற்பட்ட மோதலால் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களின் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மெக்ஸிக்கோவின் குவெரெட்டாரோ மாநிலத்தின் கொரேகிடோரோ விளையாட்டரங்கில் கடந்த ஞாயிறு இரவன்று அட்லஸ் மற்றும் குவெரெட்டாரோ அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியிலேயே இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
போட்டியின் 62 ஆவது நிமிடத்திலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதுடன் போட்டியின் இரண்டாம் பாதி ஆட்டம் கைவிடப்பட்டது.
இரு அணிகளினதும் ஆதரவாளர்கள் சரமாரியாக கையில் சிக்கிய பொருட்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி அடித்துள்ளனர்.
மைதானத்திலிருந்து பெண்கள் மற்றும் சிறுவர்களை காப்பற்றுவதற்காக காவலர்கள் விரைவாக வாயிற் கதவுகளை திறந்து விட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகின்றன.
இந்த மோதல் சம்பவத்தால் இப்போட்டித் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மெக்ஸிக்கோ கால்பந்தாட்ட சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM