(எம்.மனோசித்ரா)
வத்தளை, கம்பஹா, ஜாஎல உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் 9 முச்சக்கரவண்டிகள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை கொள்ளையிட்டு விற்பனை செய்தமை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
கம்பஹா பொலிஸ் தலைமையகத்திற்கு அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவரால் முச்சக்கரவ வண்டிகளை கொள்ளையிடும் சந்தேகநபர்கள் தொடர்பில் இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சந்தேகநபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர்கள் 32 மற்றும் 33 வயதுகளையுடைய உடுகம்பொல மற்றும் மாகவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்பது தெரியவந்துள்ளது.
இவர்களால் வத்தளை, கம்பஹா, ஜாஎல உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிடப்பட்ட 9 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதே போன்று இவர்களால் கொள்ளையிடப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டிகள் கனேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டிகளை பெற்றுக் கொண்ட வாகனங்களை பழுதுபார்க்கும் நிலைய உரிமையாளர் அவற்றின் நிறம் உள்ளிட்டவற்றை மாற்றி , விற்பனை செய்வதற்காக பிரிதொருவருக்கு வழங்கியுள்ளார்.
அந்நபரால் குறைந்த விலைக்கு குறித்த முச்சக்கரவண்டிகள் ஏனைய நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன இது தொடர்பில் கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்த 34 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 4 சந்தேகநபர்களும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நபர்களிடமிருந்து தமது வாகனங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு முச்சக்கரவண்டி உரிமையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM