போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபர் கைது

08 Mar, 2022 | 09:25 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாட்டிலிருந்து தென் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலை நிர்வகிக்கும் நபருடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் காலி குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

காலி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை 07 ஆம் திகதி காலி துறைமுக பொலிஸ் பிரிவில் நுகதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரொருவர் 758 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் நுகதுவ பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வரும் , அஹங்கம பொலிஸ் பிரிவில் கொவியான பிரதேசத்தை நிரந்தரமாகக் கொண்டவராவார்.

வெளிநாட்டிலிருந்து தென் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலை நிர்வகிக்கும் நபரால் இவ்வாறு காலி பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர் ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த சந்தேகநபர் தொடர்பில் காலி குற்ற விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58