(எம்.மனோசித்ரா)
வெளிநாட்டிலிருந்து தென் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலை நிர்வகிக்கும் நபருடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் காலி குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
காலி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை 07 ஆம் திகதி காலி துறைமுக பொலிஸ் பிரிவில் நுகதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரொருவர் 758 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நுகதுவ பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வரும் , அஹங்கம பொலிஸ் பிரிவில் கொவியான பிரதேசத்தை நிரந்தரமாகக் கொண்டவராவார்.
வெளிநாட்டிலிருந்து தென் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலை நிர்வகிக்கும் நபரால் இவ்வாறு காலி பிரதேசத்தில் குறித்த சந்தேகநபர் ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் தொடர்பில் காலி குற்ற விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM