சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வழங்கப்படும் மத்திய அரசின் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள பெண்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8 கொண்டாடப்படுகிறது.
ஆண்டு தோறும் மகளிர் தினத்தையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தொழில், விவசாயம், புதுமை, சமூகப் பணி, கல்வி மற்றும் இலக்கியம், மொழியியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை ஊக்குவிக்கும் வகையில் 'நாரி சக்தி புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது.
இதன்படி, 2020 மற்றும் 21ம் ஆண்டுகளில் தலா 14 பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர் இவர்களுக்கு, இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்க உள்ளார்.
விருது பெறும் கடற்படை கேப்டன் ராதிகா மேனன், தொழில் முனைவோர் அனிதா குப்தா, இயற்கை விவசாயி மற்றும் பழங்குடியின ஆர்வலர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, இன்டெல்- இந்தியா நிறுவன தலைவர் நிவ்ருதி ராய். மாற்றுத்திறனாளி கதக் நடன கலைஞர் சைலி நந்த்கிஷோர் உள்ளிட்டோர் நேற்று டெல்லி வந்தனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
ஆண்டுதோரும் மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய அரசு ஆறு தேசிய விருதுகளை வழங்குகிறது.
பெண்களின் முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்புக்காக வழங்கப்படும் இந்த விருதுகளை ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருது என்று அழைக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM