(என்.வீ.ஏ.)
பெல்கிரேட் உள்ளக அரங்கில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற உலக உள்ளக டுவர் சில்வர் போட்டியில் ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.19 மீற்றர் உயரம் தாவிய மொண்டோ டுப்லான்டிஸ் தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார்.
பெல்கிரேட் 2022 உலக மெய்வல்லுநர் உள்ள சம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுவதற்கு சில தினங்களே இருக்கின்ற நிலையில் அதே அரங்கில் டுப்லான்டிஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.
சுவீடன் நாட்டவரான 22 வயதுடைய டுப்லான்டிஸ், கடந்த இரண்டு வருடங்களாக இந்த உயரத்தை தாவ முயற்சித்ததுடன், நடப்பு உள்ளக மெய்வல்லுநர் பருவ காலத்தில் பல தடவைகள் இந்த உயரத்தை நெருங்கி வந்துள்ளார்.
கடந்த வருடம் இதே அரங்கில் 6.10 மீற்றர் உயரத்தைத் தாவிய டுப்லான்டிஸ், இம்முறை பங்குபற்றிய போது உலக சாதனையைப் புதுப்பித்துக் கொண்டார்.
பெல்கிரேடில், 5.61 மீற்றரிலிருந்து தனது முயற்சியை ஆரம்பித்த டுப்லான்டிஸ், அந்த உயரத்தை ஒரே தடவையில் தாவினார்.
அவரது எதிராளிகள் அனைவரும் பரபரப்புக்கு மத்தியில் பார்த்துக்கொண்டிருக்க, டுப்லான்டிஸ் 5.85 மீற்றர் உயரத்தையும் தொடர்ந்து 6.00 மீற்றரையும் ஒரே தடவையில் தாவி சகலரையும் பிரமிக்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோலூன்றிப் பாய்தலுக்கான குறுக்குக் கம்பம் 6.19 மீற்றர் உயரத்தில் வைக்கப்பட்டது. அந்த உயரத்தை தாவுவதற்கு டுப்லான்டிஸ் எடுத்த முதல் இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
மூன்றாவதும் கடைசியுமான முயற்சியில் குறுக்குக் கம்பத்தை அவரது முழங்கால் உரசியது. ஆனால் குறுக்குக் கம்பம் லேசாக அசைந்ததே தவிர அது விழவில்லை. தொடர்ந்து கோலுடன் மேலெழுந்த டுப்லான்டிஸ், 6.19 மீற்றர் உயரத்தைத் தாவி கீழே உள்ள மெத்தையில் கால்களைப் பதித்தபோது பேரானந்தத்தில் துள்ளிக் குதித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், '50 தடவைகள் 6.19 மீற்றர் உயரத்தைத் தாவ முயற்சித்தேன்' என டுப்லான்டிஸ் கூறினார்.
'அதற்கு நீண்ட காலம் காத்திருந்தேன். இது போன்று வேறு எந்த உயரத்தையும் தாவியபோது எனக்கு சிரமம் ஏற்பட்டதில்லை. எனவே இது மகிழ்ச்சி தருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக இது மிகவும் கடினமானதாகவும் கடும் முயற்சியுடன் கூடியதாகவும் இருந்தது. இப்போது நான் உண்மையிலேயே சந்தோஷம் அடைகிறேன்' என டுப்லான்டிஸ் மேலும் தெரிவித்தார்.
டொருன் நகரில் 2020 பெப்ரவரி மாதம் 6.17 மீற்றர் உயரத்தையும் ஒரு வாரம் கழித்து க்ளாஸ்கொவில் 6.18 மீற்றர் உயரத்தையும் இப்போது பெல்கிரேடில் 6.19 மீற்றர் உயரத்தையும் தாவிய டுப்லான்டிஸ் கடந்த 2 வருடங்களில் 3 தடவைகள் உலக சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் இம் மாதம் 18ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக உள்ளக அரங்கு சம்பியன்ஷிப் போட்டியில் உலக சாதனையாளர் டுப்லான்டிஸ் மிகுந்த எதிர்பார்ப்புடன் பங்குபற்றவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM