(சுபத்ரா)
உக்ரேன்மீதான ரஷ்யாவின் படையெடுப்பு கணிப்புகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் போர் இந்தளவுக்கு நீளும் என்றோ, உக்ரேன் இந்தளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்றோ, ரஷ்யா எதிர்பார்க்கவில்லை.
அமெரிக்காவும் இவ்வாறானதொரு களநிலையை கற்பனை செய்யவுமில்லை.
கடந்த பெப்ரவரி 2ஆம், 3ஆம் திகதிகளில், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு உக்ரேன் நிலைமைகள், ரஷ்யாவின் திட்டங்கள் தொடர்பாக, மூடிய அறைக்குள் விளக்கம் அளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் கூட்டு தலைமை அதிகாரிகளின் தலைவர், (Chairman of the Joint Chiefs of Staff) ஜெனரல் மார்க் மில்லே (Gen. Mark Milley) காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் போது, ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கினால், உக்ரேன்தலைநகர், கீவ் 72 மணித்தியாலங்களுக்குள் ரஷ்ய படைகளிடம் வீழ்ச்சியடையும் என்று கூறியிருந்தார்.
கீவ் நகரைக் கைப்பற்றும் போரில், 15 ஆயிரம் உக்ரேனிய படையினரும், 4 ஆயிரம் ரஷ்ய படையினரும் கொல்லப்படுவார்கள் என்றும் அவர் மதிப்பீடு ஒன்றை முன்வைத்திருந்தார்.
அமெரிக்காவின் அந்த மதிப்பீடு எந்தளவுக்கு தலைகீழான நிலையில் இருக்கிறது என்பதை, தற்போதைய போர்க்கள நிலைமைகளே சாட்சி.
போர் எல்லா நேரத்திலும், கணிப்புகளுடன் பொருந்துவதில்லை.
ஒரு போரின் வெற்றி தோல்வியை, படை பலமோ, ஆயுத தளபாடங்களோ மாத்திரம் தீர்மானிப்பதில்லை, போரிடும் தரப்புகளின் வீரம், மனவுறுதி, போர் மூலோபாயங்கள், காலநிலை, என்று பிற காரணிகளும் அதில் தாக்கம் செலுத்தும்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-03-06#page-3
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM