மேல் மாகாணத்தில் உள்ள 110 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அனைத்து பொலிஸாரையும் உஷார் நிலையில் இருக்குமாறு மேல் மாகாணத் துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று இரவு மேல் மாகாணம் முழுவதும் ஒரே நேரத்தில் அதிரடியாக முன்னெடுக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நடவடிக்கைகள் குறித்தே இவ்வாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் நேற்று மேல் மாகாணத்துக்கு உட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இரத்துச் செய்ததாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
நேற்று மாலை 6.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணிவரையில் மேல் மாகாணம் முழுவதும் இவ்விஷேட நிலைமை பிரகடனம் செய்யப்பட்டு பொலிஸார் அனைவரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். விஷேடமாக நேற்று இரவு 11.00 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரை விஷேட சுற்றி வலைப்புக்களை ஒரே நேரத்தில் பொலிஸார் அதிரடியாக முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பிலேயே நேற்று மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸாரையும் உசார் நிலையில் இருக்குமாறு நேற்று காலை பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் உத்தர்வு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM