'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிப்பில் தயாராகிவரும் 'தீயவர் குலைகள் நடுங்க' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தீயவர் குலைகள் நடுங்க'. இதில் கதையின் நாயகியாக தமிழ் சினிமாவின் 'டஸ்கி பியூட்டி' என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கிறார். இவர்களுடன் ராம்குமார் சிவாஜி கணேசன், ஜிகே ரெட்டி, பிரவீன் ராஜா, ப்ராங் ஸ்டார் ராகுல், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பரத் ஆசீவகன் இசையமைக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில் , '' கிரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. மன இறுக்க நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் பின்னணியில் உருவாகியிருக்கும் இதன் திரைக்கதை ரசிகர்களை கவரும்.
ஆக்சன் கிங் அர்ஜுன் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். எதிர்பாராத திருப்பங்களுடனான பரபரப்பான திரைக்கதை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.'' என்றார்.
ஜி எஸ் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் நிலைகுத்திய பார்வையும், அவரது கையில் கிறித்துவ மத வேத நூலை இறுக்கமாக பிடித்திருப்பதும், அவருக்கு பாதுகாப்பு வழங்குவது போல் பின்னணியில் ஆக்சன் கிங் அர்ஜுன் குடையைப் பிடித்துக்கொண்டு ஆக்ரோஷத்துடன் தோன்றுவதும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM