(எம்.மனோசித்ரா)
முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொல்கஹாவெல பொலிஸ் பிரிவில் நீதிமன்றத்திற்கருகில் முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டு சென்று கொண்டிருந்த சந்தேகநபர் பொல்கஹாவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு , அவரிடமிருந்து 5 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய , கனேமுல்ல - இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர் கடவத்தை, கிரிபத்கொட, அலவ்வ, றாகமை, நிட்டம்புவ மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் 5 முச்சக்கரவண்டிகளையும் , 6 மோட்டார் சைக்கிள்களையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவற்றில் முச்சக்கரவண்டிகளின் 4 பாகங்களும் , 6 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 4 சந்தேகநபர்கள் நிட்டம்புவ மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 37 - 47 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
இவர்களில் பிரதான சந்தேகநபருக்கு எதிராக பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தினால் 7 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
ஏனைய 4 சந்தேகநபர்களும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொல்கஹாவெல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM