ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை எதிர்கொண்டுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக மீட்கும் வரை அரசாங்கம் ஓய்வெடுக்காது என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து நாடு திரும்புவதற்காக - ஆபரேஷன் கங்காவின் கீழ் ஒன்பதாவது விமானம் நாட்டை வந்தடைந்தது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் பெரும்பாலும் மாணவர்கள்.
இவர்களை நாட்டிற்கு திரும்பக் கொண்டுவருவதற்காக கங்கா ஆபரேஷன் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் கீழ் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
முதற்கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டதில் இருந்து இதுவரை 8,000 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வன்முறையை உடனடியாக நிறுத்தவும், விரோதப் போக்கை நிறுத்தவும் இந்தியா அனைத்து தரப்பிற்கும் ஐ. நா சிறப்பு அமர்வின் போது அழைப்பு விடுத்தது.
உக்ரைனில் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் இந்தியா ஆழ்ந்த கவலையில் உள்ளது.
வன்முறையை உடனடியாக நிறுத்தவும், பகைமையை முடிவுக்குக் கொண்டுவரவும் மீண்டும் வலியுறுத்துவதாக ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM