வீதியை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம்.!

Published By: Robert

13 Oct, 2016 | 02:03 PM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ருவன்வெல்ல-நிட்டம்புவ பிரதான வீதியை வழிமறித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முல்லுகாமம் சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லுகாமம், முரளிஓய, வின்சிட், சனிகிராப்ட், கஹட்டகஸ்தென்ன, ருவன்வெல்ல ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லிகாமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பேரணியாக வந்த தொழிலாளர்கள் முரளிஓய தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் திரண்டனர். அதற்கு அப்பால் செல்வதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53