(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழு அரசாங்கமும் பொறுப்பாகும். அமைச்சுப்பதவிகளை வகித்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதன் மூலம் இந்த பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொள்ள முடியாது.
அத்துடன் அரசாங்கத்துடன் இருக்கும் பங்காளி கட்சிகள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பது மக்களை ஏமாற்றும் நாடகமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூகொடை பஸ் நிலையத்துக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவகையில் நாடு பாரிய நெருக்கடிகளை சந்துத்து வருகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் முன்னால் வாகனங்கள் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் இருப்பதை காண்கின்றோம்.
இதனால் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
பொது போக்குவரத்து சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பணிக்கு செல்பவர்கள் உரிய நேரத்துக்கு தொழில் நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அதேபோன்று தினமும் ஏழரை மணி நேரம் மின் துண்டிக்கப்படுவதால் வியாபார நிலையங்கள் தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் பாரிய நடத்தை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக இருப்பது அரசாங்கத்திடம் டொலர் இல்லாமையாகும்.
அதனால் ஜனாதிபதி உட்பட இந்த அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நாட்டை கொண்டுசெல்ல முடியாது என்தையே இது எடுத்துக்காட்டு கின்றது.
அதனால் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு முடியாது என்றால் முடியுமான ஒருவருக்கு நாட்டின் ஆட்சியை கையளித்துவிட்டு அரசாங்கம் இரஜினாமா செய்யவேண்டும்.
அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடிக்கு ஜனாதிபதி, பிரதமர், உடப்ட அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் அமைச்சரவையில் எடுக்கும் தீர்மானங்களுக்கு கையை உயர்த்திவிட்டு வெளியில் வந்து, அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து, குற்றம் சுமத்துவதால் இந்த பொறுப்பில் இருந்து இவர்களுக்கு ஒதுங்கிக்கொள்ள முடியாது.
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் தற்போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிக்க ஆரம்பித்திருக்கின்றன.
அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெளியில் இருந்து விமர்சிப்பது, இது மக்களை ஏமாற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நாடகம்.
அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்து எம்முடனை இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக குரல்கொடுக்க முன்வரவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் மக்களின் பிரச்சினையை திசை திருப்புவதற்காக அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நாடகம் ஒன்றையே அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் தற்போது அரங்கேற்றி வருகின்றன. மக்கள் ஒருபோதும் இவர்களை நம்பப்போவதில்லை என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM