(நா.தனுஜா)
மியன்மார் இலங்கைக்கு அதிக விலையில் அரிசியை ஏற்றுமதி செய்வதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதனை மறுத்திருக்கும் இலங்கையிலுள்ள மியன்மார் தூதரகம் இயலுமானவரையில் இலங்கைக்கு மிகவும் குறைவான விலையிலேயே அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறது.
மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்காக ஏனைய நாடுகளை விடவும் இலங்கை அதிக தொகையைச் செலுத்துவதாக அந்நாட்டுப் பத்திரிகையான 'குளோபல் நியூ நைட் ஒஃப் மியன்மார்' கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.
அதற்கு மறுப்புத் தெரிவித்து இலங்கையிலுள்ள மியன்மார் தூதரகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும்போது மட்டுப்பாடுகள் குறைவாகக் காணப்படுவதாக மற்றுமொரு தவறான தகவல் அந்தச் செய்தியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான வெள்ளை அரிசி ஏற்றுமதியின்போது, அரிசி உரியவாறு அரைக்கப்பட்டு, அதன் தரம் தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனையில் உரியவாறான நியமங்களைப் பூர்த்திசெய்ததன் பின்னரே ஏற்றுமதி செய்யப்படுகின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM