நாட்டில் உழைக்கும் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த அரசாங்கம் மிகைக்கட்டண வரியை விதிக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் அந்த முயற்சியை ஐக்கிய மக்கள் சக்தி தோற்கடித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கம் கூறிய வெற்றுக் கோசங்கள் அனைத்தும் இன்று பொய்யாகிப் போயுள்ளதாகவும், பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தந்தைமார்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடே உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
திஸ்ஸமஹாராம - உடமத்தல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாமல் தந்தைமார்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டை எவ்வாறு சுபிட்சமான நாடு என்று கூற முடியும் . விவசாயிகளுக்கு உரத்தை இல்லாமலாக்கியதும், மல உரம் வழங்கப்பட்டதும், சுபீட்சத்தின் தொலை நோக்கின் பிரகாரமா ?
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தை பெற்றுக்கொண்டு அதற்காக முடிவில்லாமல் பொய்யுரைப்பதையே மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM