பெலருஸிலுள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பாக பிரதமரின் உத்தரவு

Published By: Vishnu

02 Mar, 2022 | 02:47 PM
image

பெலருஸில் உயர்கல்வியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் மோதல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெலருஸில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவு பிரதமரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ரஷ்யா அல்லது இலங்கை செல்வதற்கு விசா வழங்குமாறும் பிரதமர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார், அதே நேரத்தில் கல்வி நடவடிக்கைகளை பல வாரங்களுக்கு ஒத்திவைப்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04