கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள " எதற்கும் துணிந்தவன் ” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10 -ஆம் திகதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் ,சத்யராஜ் ,சரண்யா பொன்வண்ணன் ,சூரி மற்றும் புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகிரத்துள்ளது.
கிராமப்புற பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இதில் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM