நுரையீரல் தொடர்பான நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உண்மை. ஏனெனில் நாம் சுவாசிக்கும் காற்றில் ஏகப்பட்ட மாசுகளை நாம் அனுமதித்துவிட்டோம். அத்துடன் நாம் வசிக்கும் சுற்றுப்புறம் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இல்லை. சுற்றுச்சுழலை பாதிக்கும் ஏராளமான தொழிற்சாலைகளை எம்முடைய வாழ்வாதாரத்திற்காக நாம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம். அத்துடன் வாகனத்தின் பெருக்கத்தையும் அனுமதித்துவிட்டோம். சிகரெட் பிடிக்காதவர்களுக்கு பிடிப்பவர்கள் விடும் புகையால் கூட பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றின் காரணமாக இன்றைய காலத்தில் நுரையீரல் தொடர்பான ஏராளமான நோய்களுக்கு நாம் ஆளாகிறோம்.
தற்போது பிறந்த குழந்தைகளுக்கு கூட பிரான்கைடீஸ் ஸிஸ்டிக்ஸ் எனப்படும் நுரையீரல் நீர் கட்டிகள் ஏற்படுகின்றன. மேலும் ஒரு சில குழந்தைகளுக்கு பிறக்கும் போது நுரையீரலின் சிறுபகுதி ஒட்டாமல் பிரிந்தேயிருக்கும். இதற்கு ஸ்குவாட்ராஸ்டேசன் என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இதனையனைத்தும் இன்றைய நவீன மருத்துவம் குணப்படுத்தும் சிகிச்சைகளை கண்டறிந்து இருக்கிறது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நவீன சாதனம் ப்ராங்கோஸ்கோபி என்பது தான். இதன் மூலம் நுரையீரல் பாதிப்பினை துல்லியமாக கண்டறிய இயலும். குணப்படுத்தவும் இயலும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய், பிற உறுப்புகளின் பாதிப்பால் நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், பணி சார்ந்த இடங்களால் ஏற்படும் நுரையீரல் பாதிப்புகள், நுரையீரலில் தவறுதலாக சென்றடைந்திருக்கும் அந்நிய பொருட்களை கண்டறிதல் ஆகியவற்றை இந்த நவீன சாதனத்தின் மூலம் துல்லியமாகவும் எளிதாகவும் கண்டறிந்து குணப்படுத்தலாம்.
அதே தருணத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காச நோயாளிகள் சளியால் அவஸ்தைப்பட்டால், அந்த சளியை இந்த சாதனத்தின் மூலம் பிரித்து எடுக்கலாம். நுரையீரலில் கட்டிகள் இருந்தால் பயாப்ஸி எடுக்கவும் இது பயன்படுகிறது. நுரையீரலில் இருந்து நீரை எடுத்து புற்றுநோயாளிகளுக்கு பரிசோதிக்கவும் இது பெரிதும் பயன்படுகிறது. அதேபோல் குரல் நாணில் (வோகல் கார்ட்) பிரச்சினை ஏதும் இருந்தாலும் இதன்மூலம் கண்டறிந்து சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.
டொக்டர் V சுந்தர் M.S.,
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM