(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் 5 மணி நேர மின் துண்டிப்பு 24 மணி நேரமாக மாறும் காலம் நீண்ட தூரத்தில் இல்லை.
ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையே இதற்கு காரணமாகும் என இலங்கை மின்சாரசபை ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது கைவசம் இருக்கும் எரிபொருள் தொடர்பாகவும் அதனால் மின்சாரசபை முன்னெடுத்துவரும் மின் துண்டிப்பு தொடர்பாகவும் அரசாங்கமும் நிறுவனங்களும் பொறுப்பற்ற முறையிலேயே கருத்து தெரிவித்து வருகின்றன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கும் விடயங்கள் மின்சாரசபைக்கு தெரியாது.
அதனால் பொறுப்பக்கூற வேண்டிய விடயத்துக்கு பொறுப்புக்கூறாமல் இருக்கும் ஆட்சியாளர்களும் நிறுவன பிரதானிகளுமே நாட்டில் இருக்கின்றனர்.
தற்போது ஒருநாளைக்கு 5மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொண்டு அதற்கான மாற்றுவழியை தேடிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இன்னும் சில தினங்களில் 7மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொண்டு அதற்கான பதிலை தேடவேண்டிவரும்.
இந்நிலையில் 7 மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு 24 மணி நேரம் நாட்டில் மின் துண்டிப்பு மேற்கொள்ளும் காலம் நீண்ட துரத்தில் இல்லை.
மின் துண்டிப்பை தொடர்ந்து முன்னெடுக்கின்றார்களே தவிர, இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை அதனால் நாடு பாரிய அழிவுக்கே சென்றுகொண்டிருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM