நாட்டில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த கைது நடவடிக்கையானது ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மஹஓய
மஹஓய - டெம்பிடிய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இதன் போது மணல் ஏற்றிச் செல்லுவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மஹஓய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வாழைச்சேனை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆளங்குளம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மணல் ஏற்றிச் செல்லுவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனமல்வில
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக தனமல்வில பொலிஸ் பிரிவு கிதுல்கொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகநபர் மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட டிபர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 53 வயதுடைய அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தனமல்வில பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார்
பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மன்னார் - இலுப்புகடவாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆதிமோட்டை பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகநபர் ஒருவர் மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட டிபர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இலுப்புகடவாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM