நுவரெலியா விடுதி அறையொன்றிலிருந்து கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

Published By: Digital Desk 4

27 Feb, 2022 | 03:16 PM
image

நுவரெலியா விடுதி அறையொன்றில் தங்கியிருந்த கணவன் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற ஆண் (59) ஒருவரும் பெண் (58) ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது

நேற்றையதினம் (26) கதிர்காமத்திலிருந்து 8 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களுடன் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக நுவரலியாவிற்கு சென்று நுவரெலியா கெலேகால பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

இதன்போது இவர்கள் தங்களுடைய இரவு உணவுத் தேவைக்காக பயன்படுத்திய 'பாபிகியுவ்'  (Barbecue) இயந்திரத்தை குளிரிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அறைக்குள் வைத்து நித்திரைக்கு சென்றுள்ளனர்.

காலையில் குறித்த இருவரும் எழுந்திருக்காததை அறிந்த மகன் மற்றும் மகள்மார்கள் இருவரும் அறையினுடைய மற்றொரு சாவியை பயன்படுத்தி கதவை திறந்து பார்க்கும் பொழுது, அவர்கள் இருவரும் உயிரிழந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

பின்னர் விடுதியின் முகாமையாளரின் ஊடாக நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பாபிகியுவ் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் குருணாகல், கொக்கரல்ல பகுதியில் வசிக்கும் தொழிலதிபரான அஜித் குமார ஹேரத் (வயது 59), அவரின் மனைவியான ஆயுர்வேத தாதி மாலனி நந்தா மொலகொட (வயது 58) என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுடைய சடலங்கள் இன்றையதினம் (27) நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை இடம்பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக நுவரெலியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31