உக்ரைனில் இருந்து கடந்த 2 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்ததால், மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மிரண்டு போய் இருக்கிறார்கள்,உயிர் பிழைக்க அவர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்ததுமே ஆயிரக்கணக்கானோர் கார்களில் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் தலைநகர் கீவ்வில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உக்ரைனின் அண்டை நாடுகளான மால்டோவா, போலந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களில் உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மைய தலைவர் பிலிப்போ கிராண்டி கூறும்போது,
“கடந்த 48 மணிநேரத்தில் உக்ரைனில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இதில் பெரும்பாலான அகதிகள் போலந்து மற்றும் மால்டோவா நாடுகளுக்குள் தஞ்சம் அடைந்து உள்ளனர். இன்னும் ஏராளமானோர் எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM