சுவீடன் அரசு தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது.
உக்ரைனுக்கு நேரடியாக இராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறிய நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள சில நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தன.
ஒரு சில நேட்டோ நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன. ஆனால் நேரடியாக எந்த நாடும் உக்ரைனுக்கு இராணுவ உதவிகளையோ, படைகளையோ அனுப்பவில்லை.
இந்த நிலையில் சுவீடன் அரசு தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் சுவீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாக செலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள புடினின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அதேபோல், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM