கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மது போதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கிளிநொச்சி பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் (25-02-2022) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இவ்வாறு மதுபோதையில் வாகனங்களை செலுத்திய சாரதிகளுக்கு தலா 25,000 ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பேருக்கு எதிராக இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்ட அதேவேளை வாகனக் காப்புறுதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தவறான முறையில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற இரண்டு பேருக்கு தலா 5000 ரூபாவும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை 06 மாத காலத்திற்கு இடைநிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM