முதல் நாள் இடம்பெற்ற மோதலில் ரஷ்ய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சக துணை அமைச்சர் ஹன்னா மால்யார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவை குறிவைத்து சரமாரியான குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக உக்ரைன் தெரிவித்துள்ளது, இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ரஷ்யாவின் 7 விமானங்கள், 6 ஹெலிகொப்டர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சக துணை அமைச்சர் ஹன்னா மால்யார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM