உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா நேற்று முதல் ஆரம்பித்துள்ள நிலையில், முதல் நாள் போர் வெற்றிகரமானது என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் முதல் நாளில் 11 விமான நிலையங்கள் உட்பட 74 இராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் 'முதல்நாள் போர் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருபத்தோராம் நூற்றாண்டிலும் போரின் தாக்கத்தால் படைவீரர்களும், மக்களும் கொன்று குவிக்கப்படுவது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே மாபெரும் சவாலாக அமைந்துள்ளது எனவும் அதனால் ரஷ்யா போரை நிறுத்தி, தூதரக ரீதியில் சமாதானத் தீர்வை நாட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன.
இதேவேளை உக்ரைன் போர், தன்னுடைய பதவிக்காலத்தில் சோகமான தருணம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர்,
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக நான் பதவி வகிக்கும் காலத்தில் இச் சம்பவம் மிகவும் சோகமான தருணமாக கருதுகின்றேன் .
நான் இந்த பாதுகாப்பு சபை கூட்டத்தின் ஆரம்பத்தில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை நோக்கி, எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து கூறுகிறேன்.
உக்ரைன் மீதான படையெடுப்பில் இருந்து உங்கள் படைகளை நிறுத்துங்கள், ஏராளமானவர்கள் இறந்திருக்கிறார்கள் சமாதானத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.
ஆனால் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, டொன்பாஸில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையை ஜனாதிபதி புட்டின் அறிவித்து விட்டார்.
உக்ரைன் படைகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
மனித நேயத்தின் அடிப்படையில் தங்கள் படைகளை மீண்டும் ரஷ்யாவுக்கு ஜனாதிபதி புட்டின் திரும்ப அழைக்க வேண்டும்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே மிக மோசமான போரை ஐரோப்பாவில் தொடங்க அனுமதிக்காதீர்கள்.
இந்தப் போரின் விளைவுகள் உக்ரைனுக்கு மட்டுமல்ல, ரஷ்ய கூட்டமைப்புக்கு மட்டுமல்ல, முழு உலகத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தி விடும்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வருகின்ற தருணத்தில், இந்தப் போரினால் உலகப்பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை நாம் முன்கூட்டியே கணிக்க முடியாது.
வளரும் நாடுகள் பலவும் மீண்டு வருவதற்கு இடம்கொடுக்க வேண்டும். இது மிக மிக கடினமானது. எண்ணெய் விலைகளின் ஏற்றம், உக்ரைனில் இருந்து கோதுமை ஏற்றுமதி நிறுத்தம், சர்வதேச சந்தைகளில் உறுதியற்ற தன்மையால் ஏற்படும் வட்டி விகிதங்கள் மாற்றம் ஆகியவை மிக கடினமானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM