மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் - உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளின் உறவுகள் 

Published By: Digital Desk 4

24 Feb, 2022 | 05:02 PM
image

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கைதிகளின் உறவுகள் இரண்டாவது நாளாக ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் அவர்களை சந்தித்த உறவினர்கள் வடமாகாண ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக தெரிவித்ததுடன் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தினர்.

இந்நிலையில் எமக்கு நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடமாட்டோம் என கைதிகள் தெரிவித்ததையடுத்து உறவினர்களும் அவர்களுக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கைதிகளின் உறவுகள் நேற்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே நேற்று தனது அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை தொடர்பு கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளை சிறையில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி கொடுத்தார்.

இந்நிலையில் ஆளுநரின் வாக்குறுதியை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு தெரிவித்த போது அதனை ஏற்க மறுத்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்ததையடுத்தே அரசியல் கைதிகளின் உறவுகளும் மீண்டும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46