பாராளுமன்ற நூலகத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை - சபாநாயகர் அறிவிப்பு

Published By: Digital Desk 3

24 Feb, 2022 | 11:43 AM
image

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்கள் அடங்கிய (87) தொகுப்புகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக பாராளுமன்ற நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அந்த ஆணைக்குழுவின் சாட்சியங்கள் அடங்கிய 87 தொகுதிகள் 2022.02.22 ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்டவை என்றும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சபையின் விசேட அனுமதியுடன் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் 2021.02.25 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் அறிவித்தார். 

இதேவேளை, பொலன்னறுவை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ரொஷான் ரணசிங்க சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணை சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.

அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அமைச்சர்  ஜோன்ஸ்டன் பர்னாந்து இதனை வழிமொழிந்தார். பாராளுமன்றம் இன்று மு.ப. 10.00 மணிக்கு கூடியதுடன், மு.ப. 11.00 மணி முதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

அதனை அடுத்து பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது 2003 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தை திருத்துவதற்கு புலமைச் சொத்து (திருத்தம்) சட்டமூலம் சபை முதல்வரும் அமைச்சருமா தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. 

சட்டமூலத்தை கீழே உள்ள இணைப்பில் பார்வையிடவும் http://documents.gov.lk/files/bill/2022/2/181-2022_T.pdf அதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்ததுடன் பி.ப. 5.20 வரை இடம்பெற்ற விவாதத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர். 

அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் கூட்டநடப்பெண் குறித்து கேள்வியெழுப்பியதுடன், போதிய கூட்ட நடப்பெண் இல்லாமையால் பாராளுமன்றம் இன்று (24) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37