நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 11 வயது சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை :
ஹம்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹம்பாந்தோட்டை -மீகஹஜதுர பிரதான வீதி மின் நிலையத்திற்கு அருகில் மீகஹஜதுர நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்சைக்களுடன் டிபர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய பெண் மற்றும் அவருடைய மகள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 11 வயதுடைய மல்பொத்தாவ, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிலியந்தலை :
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிலியந்தலை -கொட்டாவ பிரதான வீதி பெலென்வத்த பிரதேசத்தில் பயணித்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுபாட்டையிழந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிள் செலுத்திய நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 30 வயதுடைய காலி - உனவடுன பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குறித்த லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கனகராயன்குளம் :
கனகராயன்குளம் கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதி புதுக்குளம் பிரதேசத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நின்றுக் கொண்டிருந்த இருவர் மீது லொறி ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்ததாகவும் இருவரும் சிகிச்சைக்காக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய கனகரயான்குளம் தெற்கு பகுதியை சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு- வெல்லம்பிட்டி :
வெல்லம்பிட்டி-அவிசாவலை பிரதான வீதியின் கொலன்னாவை பிரதேசத்தில் பாதசாரி மீது காரியாலய ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாதசாரி மீது மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய லங்சியாவத்தை, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
விபத்தை ஏற்படுத்திய குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM