மட்டக்களப்பு - ஏறாவூர் றகுமானியா வீதியில் வசித்து வரும் நபரொருவர் தனது (18) வயதுடைய மகனை காணவில்லை என ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து நேற்றிரவு (22) மின்சாரம் தடைப்பட்ட வேளை 8.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று குறித்த மாணவனின் தந்தை தெரிவித்தார்.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பிரிவில் கல்விகற்று வரும் எம்.ஏ.எம்.அஸ்பக் எனும் மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவனின் துவிச்சக்கர வண்டி அவரது இல்லத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகிலிருந்து இன்று (23) காலை 10.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM