(எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனாக கருதப்படும் தற்போது டுபாயில் மறைந்துள்ளதாக கருதப்படும் தெற்கின் பிரபல பாதாள உலக குழு தலைவன் 'ஹரக் கட்டா' என பரவலாக அறியப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட 20 போதைப்பொருள் சந்தேக நபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு இந்த விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை 21 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகலவுக்கு அறிவித்தது.
கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணை அதிகாரிகள், விஷேட அறிக்கை ஊடாக நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இந்த விசாரணைகளுக்காக குறித்த 20 சந்தேக நபர்கள் தொடர்பிலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அறிக்கை, குற்றப் பதிவுப் பிரிவின் அறிக்கை, மின்சார சபை அறிக்கை, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அறிக்கை, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அறிக்கை, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அறிக்கை, பொலிஸ் விஷேட பிரிவின் அறிக்கை, குடிவரவு குடியகல்வு அறிக்கை, மீன் பிடி திணைக்களத்தின் மீன்பிடி படகுகள் பதிவு குறித்த அறிக்கை, கலால் வரித் திணைக்கள அறிக்கை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி ராகல, அனைத்து அறிக்கைகளையும் பெற்று விசாரணைகளை முன்னெடுத்து மன்றுக்கு அறிவிக்குமாறு சி.ஐ.டி.யின் சட்டவிரோத சொத்து குறித்த விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM