சீன உளவுத்துறையிடமிருந்து தங்கத்தின் குறைகடத்தி தொழில்துறையை காப்பாற்றும் முயற்சியில் தாய்வான் கடந்த 12 ஆண்டுகளாக போராடி வருகின்றது.
இந்நிலையில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளையும் தாய்வான் முன்னெடுத்துள்ளது.
தேசிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தாய்வான் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட அல்லது மானியம் பெற்ற எந்தவொரு தனிநபர்கள் அல்லது நிறுவனங்களும் வரைபு விதிமுறைகளின்படி, சீனாவுக்கான எந்தவொரு பயணத்திற்கும் அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் 71,000 மற்றும் 358,000 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
உயர் தொழில்நுட்பத் தொழில் தாய்வானின் உயிர்நாடியாகும். இருப்பினும், தாய்வானுக்குள் சீன விநியோகச் சங்கிலியின் ஊடுருவல் சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமாகிவிட்டது.
முக்கியமான தொழில்நுட்பங்களை திருடுவதுடன் தாய்வானின் விதிமுறைகளை மீறுகிறார்கள். அனுமதியின்றி தாய்வானில் செயல்படுகிறார்கள். தாய்வானில் சட்டவிரோதமாக முதலீடு செய்கிறார்கள்.
இது தைவானின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் தொழில்துறையின் போட்டித்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் அந்நாட்டு அரசின் கருத்தாகியுள்ளது.
எனவே தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நிர்வாகம், முழுமையான தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதை அவசரத் தேவையாக கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM